உடுமலையில் அன்பு பாலம் அமைப்பின் 4வது ஆண்டு இலவச பொருட்கள் விநியோகம்

உடுமலையில் அபெக்ஸ் கிளப்பின் அன்பு பாலம் அமைப்பு 4வது ஆண்டாக ஏழை எளிய மக்களுக்கு இலவச பொருட்கள் விநியோகம் செய்தது. சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ராம அய்யர் திருமண மண்டபத்தில் அபெக்ஸ் கிளப்பின் அன்பு பாலம் அமைப்பு சார்பில் 4வது ஆண்டாக இலவச பொருட்கள் விநியோகத் திட்டம் நேற்று காலை தொடங்கியது.

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நல்ல நிலையில் உள்ள ஆடைகள், புத்தகங்கள், பள்ளி பைகள், விளையாட்டு பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் மண்டபத்தில் குவிக்கப்பட்டன. சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மண்டபத்திற்கு வருகை தந்து தங்களுக்கு தேவையான உடைகள் மற்றும் மாணவர்களுக்கான புத்தகங்களை இலவசமாக பெற்றுச் சென்றனர்.



இந்த நிகழ்வில் அபெக்ஸ் தேசிய தலைவர் பிரசாத், மாவட்ட ஆளுநர் ஜெயபால் மற்றும் தேசிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். உடுமலை அபெக்ஸ் தங்கத் தலைவர் கோவிந்தராஜன், உப தலைவர் சந்திரன், செயலாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் மவுன குருசாமி மற்றும் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ராம அய்யர் மண்டப அறக்கட்டளையின் சுப்புராமன் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...