கோவை புத்தகத் திருவிழா: 75,000 பேர் வருகை, ரூ.3 கோடி விற்பனை

கோவையில் நடைபெற்ற 8வது புத்தகத் திருவிழா நிறைவடைந்தது. 75,000 பேர் வருகை புரிந்தனர். மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகின. குழந்தைகள் புத்தகங்களும் நாவல்களும் அதிக விற்பனையைப் பெற்றன.


Coimbatore: கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா அமைப்பு இணைந்து நடத்திய 8வது புத்தகத் திருவிழா கொடிசியாவில் ஜூலை 19 அன்று தொடங்கி, ஜூலை 28 இரவு 8 மணியுடன் நிறைவடைந்தது. இந்த 10 நாள் நிகழ்வில் பல்வேறு பதிப்பகங்கள் தங்கள் புத்தகங்களை காட்சிப்படுத்தியதுடன், தினமும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

கொடிசியா அமைப்பினர் வழங்கிய தகவலின்படி, இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவிற்கு 75,000 பேர் வருகை புரிந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 7,500 அதிகமாகும். வருகை புரிந்தவர்களில் 224 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், 71 அரசு பள்ளி மாணவர்கள், 17,000 பள்ளி சாரா மாணவர்கள், 62 கல்லூரி மாணவர்கள் மற்றும் 5,000 கல்லூரி சாரா மாணவர்கள் அடங்குவர்.

விற்பனை விவரங்களைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக கொடிசியா அமைப்பினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, குழந்தைகளுக்கான புத்தகங்களும், நாவல்களும் அதிக விற்பனையைப் பெற்றுள்ளன.

இந்த புத்தகத் திருவிழா வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதோடு, பதிப்பகங்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் தங்கள் படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு சிறந்த தளமாக அமைந்துள்ளது. மேலும், இது கோவை நகரின் கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...