கோவை தொண்டாமுத்தூரில் யானையை விரட்டிய இளைஞர் உயிரிழப்பு

கோவை தொண்டாமுத்தூர் அருகே விராலியூரில் காட்டு யானையை விரட்டிய 24 வயது இளைஞர் யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். வனத்துறையினரின் எச்சரிக்கையை மீறி செயல்பட்டதால் இந்த சோகம் நேர்ந்தது.


Coimbatore: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த விராலியூர் குடியிருப்பு பகுதிக்குள் ஜூலை 28 அன்று இரவு சுமார் 10 மணியளவில் காட்டுயானை ஒன்று நுழைந்தது. உடனடியாக பூலாம்பட்டி வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் காட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்ட முயன்றனர். யானை ஆக்ரோஷமாக சுற்றித் திரிந்ததால், அதன் அருகே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்தனர்.

எனினும், விராலியூர் இந்திரா காலனியைச் சேர்ந்த கார்த்தி (24) மற்றும் அவரது நண்பர் ஹரிஷ் (22) ஆகியோர் யானையை விரட்ட முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த யானை அவர்களை நோக்கி திரும்பியது. ஹரிஷ் தப்பி ஓடிவிட்டார். ஆனால் கார்த்தி கீழே விழுந்ததால், யானை அவரைத் தூக்கி வீசி மிதித்தது. இதில் கார்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஹரிஷும் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வனத்துறையினரின் எச்சரிக்கையை மீறி யானையை விரட்டச் சென்றதால் நேர்ந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இன்று (ஜூலை 29) சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். அவர் தனது சொந்த நிதியாக ரூ.20,000 மற்றும் தமிழக அரசின் முதல் கட்ட நிதியாக ரூ.50,000 வழங்கினார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...