கோவை மதுக்கரையில் தடை செய்யப்பட்ட கல்குவாரிகளை மீண்டும் இயக்க எதிர்ப்பு: விவசாயிகள் சங்கம் மனு

கோவை மதுக்கரையில் தடை செய்யப்பட்ட கல்குவாரிகளை மீண்டும் இயக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது. குவாரிகள் மீண்டும் இயங்கினால் விவசாய குடும்பங்கள் பாதிப்படையும் என எச்சரிக்கை.


Coimbatore: கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் தடை செய்யப்பட்ட கல்குவாரிகளை மீண்டும் இயக்கும் நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிசாமி அளித்த மனுவில், மதுக்கரை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 100 அடி ஆழம் வரை தோண்டி எடுக்கப்பட்ட கல்குவாரிகள் தடைசெய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது அவற்றை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.



இந்த கல்குவாரிகள் மீண்டும் இயக்கப்பட்டால், அதன் அருகாமையில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், இத்தகைய கல்குவாரிகளை இயக்க நடக்கும் முயற்சியை தடை செய்ய வேண்டும் என்றும், புதிதாக அனுமதி கோரும் இத்தகைய கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.



பழனிசாமி மேலும் கூறுகையில், முதற்கட்ட நடவடிக்கையாக இதை தடுத்து நிறுத்த கோரி மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க உள்ளதாகவும், விதி மீறல்கள் ஏற்படும் பட்சத்தில் நீதிமன்றத்திற்கு சென்று அத்தகைய விதி மீறல்களை தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த பிரச்சினை தொடரும் பட்சத்தில் விவசாயிகள் வேறுவிதமான போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...