உக்கடம் குடிசை மாற்று திட்டம்: 520 வீடுகள் கட்டித்தர கோரி இந்து மக்கள் கட்சி மனு

உக்கடம் சிஎம்சி காலனி பகுதியில் 520 வீடுகள் கட்டித்தர வாக்குறுதி அளித்த குடிசை மாற்று வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது.


கோவை: உக்கடம் சிஎம்சி காலனி பகுதியில் 520க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித் தருவதாக குடிசை மாற்று வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன், உக்கடம் குளக்கரை அருகிலும் காய்கறி சந்தைக்குப் பின்புறமும் உள்ள வீடுகளை காலி செய்யுமாறு குடிசை மாற்று வாரியம் அப்பகுதி பட்டியல் இன மக்களைக் கேட்டுக்கொண்டது. மேலும், காலி செய்யப்பட்ட இடங்களிலும், தற்போது மீன் சந்தை நடைபெறும் இடத்திலும் 520 பல்லடுக்கு குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்ற வாக்குறுதியின் பேரில் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

ஒன்றரை ஆண்டுகள் கழித்து, ஒரு பகுதியில் மட்டும் 222 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆனால், இரண்டாம் கட்டமாக 298 குடியிருப்புகள் கட்டுவதற்கான எந்த வேலையும் தொடங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் சொந்தப் பகுதியிலேயே அகதிகளாக வாழ்கின்றனர்.

வாக்குறுதியின்படி மீன் சந்தை நடைபெறும் இடம் இன்னும் அப்புறப்படுத்தப்படவில்லை. 18 மாதங்கள் கடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. மாறாக, பத்திரப்பதிவு செய்யப்பட்ட அப்பகுதியின் பின்புறத்தில் உள்ள அதே பகுதி மக்களின் வீடுகளை மாற்று இடமாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தற்போது கோரியுள்ளனர்.

மீன் சந்தை உள்ள இடத்தில் குடிசை மாற்று குடியிருப்பு கட்ட தமிழக அரசு ஏற்கனவே நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், மீன் சந்தையில் வியாபாரம் செய்யும் பிற வகுப்பினரின் கோரிக்கையால் இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், உக்கடம் மீன் மார்க்கெட்டை அகற்றி, அப்பகுதி பட்டியலின மக்களுக்கு மீதமுள்ள வீடுகளைத் தர வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இக்கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், அப்பகுதி மக்களைக் கொண்டு பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...