கோவை ராம்நகரில் 19 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை: போலீஸ் விசாரணை

கோவை ராம்நகரில் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 19 பவுன் நகை மற்றும் ரூ.92,000 பணம் திருடப்பட்டுள்ளது. காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை ராம்நகர் பகுதியில் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 19 பவுன் நகை மற்றும் ரூ.92,000 பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ராம்நகர் சரோஜினி தெருவைச் சேர்ந்த முஸ்ரத்துல்லாவின் மனைவி ஷெரீன் (32) கடந்த ஜூலை 11 ஆம் தேதி தனது குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றார். செல்லும் முன் தான் அணிந்திருந்த நெக்லஸ், கம்மல், வளையல் உள்ளிட்ட 19 பவுன் நகைகள் மற்றும் ரூ.92,000 பணத்தை பீரோவில் வைத்து பூட்டி விட்டுச் சென்றார்.

ஜூலை 28 ஆம் தேதி வீடு திரும்பிய ஷெரீன், பீரோவைத் திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த நகைகள் மற்றும் பணம் காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷெரீன் உடனடியாக காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதற்கான அடையாளங்கள் ஏதும் இல்லாததால், வழக்கம்போல் வீட்டிற்கு வந்து செல்பவர்கள் மீதும் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிகிறது.

கோவை நகரில் அடிக்கடி நடைபெறும் இத்தகைய திருட்டு சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. போலீசார் விரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நகைகளை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...