கோவை பீளமேட்டில் அரிசி ஆலை அதிபரை கடத்தி தாக்கி கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது

கோவை பீளமேட்டில் அரிசி ஆலை அதிபர் ஜாபர் சாதிக் கடத்தப்பட்டு தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டார். இச்சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் தேடப்படுகின்றனர்.


கோவை: கோவை பீளமேட்டில் அரிசி ஆலை அதிபர் ஜாபர் சாதிக்கை கடத்தி தாக்கி கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் தேடப்படுகின்றனர்.

கோவை உக்கடம் லாரிப்பேட்டை அண்ணாநகரை சேர்ந்த ஜாபர் சாதிக் (35) பீளமேட்டில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவருக்கும், அரிசி கடத்தல் கும்பலை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

ஜூலை 28 அன்று, ஒருவர் ஜாபர் சாதிக்கை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டில் இருந்து வெளியே வருமாறு அழைத்தார். வீட்டு முன்பு நின்றிருந்த இருவர் அரிசி கடத்தல் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டினர். அப்போது மேலும் 5 பேர் காரில் வந்து, ஜாபர் சாதிக்கை தாக்கி காரில் கடத்தி சென்றனர்.

பாலக்காடு சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் பின்புறம் காரை நிறுத்தி, ஜாபர் சாதிக்கை நைலான் கயிற்றால் கட்டிப்போட்டு அடித்து உதைத்தனர். பின்னர் அவரிடம் இருந்த ரூ. 23,000 மற்றும் ஒரு செல்போனை பறித்துக் கொண்டனர். அரிசி கடத்தல் சம்பந்தமாக வெளியே சொன்னால் தொலைத்து விடுவோம் என மிரட்டி விட்டு சென்றனர்.

இது குறித்து ஜாபர் சாதிக் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், கரும்புக்கடை சாரமேட்டை சேர்ந்த சிக்கந்தர் பாஷா (37), கோவைப்புதூரை சேர்ந்த தவ்பிக் (39), கரும்புக்கடை திப்பு நகரை சேர்ந்த முகமத் அசாருதீன் (35) ஆகிய மூவரை கைது செய்தனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய ஜியா, ஜாகீர், அன்வர், அஜீஸ் ஆகிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...