கோவையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 26 வயது இளைஞர் கைது

கோவையில் 28 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். பெண் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை அருகே உள்ள குனியமுத்தூர் பாலக்காடு மெயின் ரோட்டில் வசிக்கும் 28 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பெண் ஏற்கனவே திருமணமானவர். ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் உக்கடம் வின்சென்ட் ரோட்டில் உள்ள குடியிருப்பு பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், 26 வயதான இளைஞருடன் நட்பு ஏற்பட்டது. பெண் அவரை தோழராக பழகினாலும், இளைஞர் அதை தவறாக பயன்படுத்தி நடந்து கொண்டதாக தெரிகிறது.

இதனால் வருத்தமடைந்த பெண், அவரை விட்டு விலகிச் சென்றார். ஆனால் இளைஞர் தொடர்ந்து அவரை தொலைபேசியில் அழைத்து, தன்னுடன் இருக்குமாறு வற்புறுத்தியுள்ளார். சம்பவத்தன்று, பெண் தனது தோழியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, இளைஞர் அங்கு சென்று அவரது கன்னத்தில் அறைந்து மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து பெண் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் விக்னேஷ் தலைமையிலான காவல்துறையினர், இளைஞர் மீது பெண்ணை அவதூறாக பேசி, மிரட்டல் விடுத்து தொந்தரவு செய்ததாக பெண் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, ஜூலை 28 ஆம் தேதி இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...