வால்பாறையில் கனமழை: மண்சரிவு ஏற்பட்டு குடியிருப்பின் மீது விழுந்ததில் பாட்டி-பேத்தி பரிதாப உயிரிழப்பு

வால்பாறை சோலையார் அணைப்பகுதியில் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு, குடியிருப்பின் மீது விழுந்ததில் பாட்டி-பேத்தி உயிரிழந்தனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சோலையார் அணைப்பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட மண்சரிவில் பாட்டி-பேத்தி பரிதாபமாக உயிரிழந்தனர்.

வால்பாறை அருகே உள்ள சோலையார் அணைப்பகுதியில் 'இடது கரை' என்ற இடத்தில் ராஜேஸ்வரி (வயது 42) மற்றும் அவரது பேத்தி ஜனனபிரியா (வயது 14) ஆகியோர் தங்களது குடியிருப்பில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இரவு பெய்த கனமழையால் அருகில் இருந்த மண் குன்று இடிந்து குடியிருப்பின் மீது விழுந்தது.



இந்த சம்பவத்தில் குடியிருப்பு சேதமடைந்ததோடு, தூங்கிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி மற்றும் ஜனனபிரியா மீது கற்கள் விழுந்து இருவரும் உயிரிழந்தனர். காலையில் அருகில் உள்ளவர்கள் இதனை கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும் பொதுமக்களும் இணைந்து கற்களை அகற்றி இருவரின் உடல்களையும் மீட்டனர்.

மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...