பொள்ளாச்சியில் கனமழை: வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் இளைஞர் பலி

பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் கனமழையால் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் 28 வயது இளைஞர் மற்றும் அவரது செல்லப்பிராணி உயிரிழந்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்தில் கனமழையால் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் 28 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திப்பம்பட்டி கிராமத்தின் அண்ணா தெருவில் வசித்து வந்த அன்பழகன் என்பவரின் மகன் ஹரிஹரசுதன் (28) தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு தொடர்ந்து பெய்த கனமழையால், ஹரிஹரசுதன் தூங்கிக் கொண்டிருந்த அறையின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் ஹரிஹரசுதன் மற்றும் அவரது செல்லப்பிராணியான நாய்க்குட்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



சுவர் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்தனர். உடனடியாக ஹரிஹரசுதனின் உடல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கோமங்கலம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மழைக்காலத்தில் பழுதடைந்த கட்டிடங்களில் வசிப்பது ஆபத்து என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...