வயநாடு மண்சரிவு: உயிரிழந்தவர்களுக்கு வானதி சீனிவாசன் இரங்கல்; நிவாரண உதவிக்கு பாஜக குழு தயார்

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிகழ்ந்த மண்சரிவில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்திற்கு கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்கு பாஜக குழு தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவின் காரணமாக, 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள செய்தியறிந்து வேதனையடைந்ததாக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயமடைந்தவர்கள் மீண்டு வர இறைவனைப் பிரார்த்தித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வயநாடு மண்சரிவு மீட்புப் பணிகளிலும், மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை செய்வதற்கு பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு அமைப்பு குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும், அக்குழு தயாராக உள்ளதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவை வானதி சீனிவாசன் ஜூலை 30 ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...