உடுமலை-மூணாறு சாலையில் மண்சரிவு: போக்குவரத்து துண்டிப்பு, வாகன ஓட்டிகள் பாதிப்பு

உடுமலை-மூணாறு சாலையில் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு, இரு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கவனமுடன் செயல்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறுக்கு செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

உடுமலையில் இருந்து மூணாறுக்கு செல்லும் சாலை ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதி வழியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக பஸ், சரக்கு மற்றும் இதர வாகன போக்குவரத்து தினசரி நடைபெற்று வருகிறது. தற்போது கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.



நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக, உடுமலை-மூணாறு சாலையில் மறையூருக்கும் மூணாறுக்கும் இடைப்பட்ட பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்து மண்சரிவு ஏற்பட்டது.



இதன் விளைவாக, இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.



உடுமலையில் இருந்து மூணாறு நோக்கி சென்ற வாகனங்கள் மறையூர் வரையில் மட்டுமே இயக்க முடிந்தது.

கேரள மாநிலத்தில் மழை தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால், வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இந்நிலையில், வனப்பகுதி வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த அசாதாரண சூழ்நிலையில், உயிர் காக்கும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாலை துண்டிப்பால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை விரைவில் களைய வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...