வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு கோவையிலிருந்து டெல்டா குவாட் குழு புறப்பட்டது

கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து 25 பேர் கொண்ட டெல்டா குவாட் குழு, நவீன மீட்பு உபகரணங்களுடன் வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு புறப்பட்டது. இந்த குழு 18 பேரிடர்களில் 3,500க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இயங்கி வரும் டெல்டா குவாட் குழு, வயநாடு நிலச்சரிவு பாதிப்பு பகுதிக்கு நவீன மீட்பு உபகரணங்களுடன் புறப்பட்டுள்ளது.

பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் சிறப்பு பயிற்சி பெற்ற விமானப்படை, கப்பல் படை, தரைப்படை ஆகிய முப்படைகளின் வீரர்கள் அடங்கிய இந்த டெல்டா குவாட் குழுவில் 25 வீரர்கள் உள்ளனர். கமாண்டர் ஈசன் தலைமையிலான இந்த குழு, கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு புறப்பட்டுள்ளது.



வயநாடு, சூரல் மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் மண்ணில் புதைந்திருப்பவர்களை துல்லியமாக கண்டறியும் சிந்தடிக் அப்ரைஸர் ரேடார் கருவியை இந்த குழு எடுத்துச் செல்கிறது. சேட்டிலைட் சிக்னல் மூலம் இயங்கும் இந்த கருவி மூலம் மண்ணில் புதைந்திருப்பவர்களை எளிதில் கண்டறிந்து மீட்க முடியும்.

மேலும், ரப்பர் படகுகள், ரப்பர் டியூப்கள், உயிர் காக்கும் ஜாக்கெட்டுகள், டார்ச் லைட் உள்ளிட்ட மீட்பு உபகரணங்களுடன் டெல்டா குவாட் குழுவினர் வயநாடு நோக்கி விரைந்துள்ளனர்.

இதுவரை 18 பேரிடர் பேரழிவுகளில் மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ள இந்த டெல்டா குவாட் குழு, 3,500க்கும் மேற்பட்டோரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...