கோவையில் வட்டாட்சியர்கள் மற்றும் துணை வட்டாட்சியர்களுக்கு இடமாற்றம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி 24 வருவாய்த் துறை அதிகாரிகள் உட்பட வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய பணியிடத்தில் உடனடியாக சேர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஜூலை 30 அன்று வெளியிட்ட அறிக்கையில், கோவை மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி வட்டாட்சியர்கள் மற்றும் துணை வட்டாட்சியர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த இடமாற்றத்தின் விவரங்கள் பின்வருமாறு:

1. சரவணக்குமார் - கோவை தெற்கு வட்டாட்சியர் பதவியிலிருந்து கோவை தெற்கு (நகர்ப்புற நிலவரித் திட்டம், அலகு 1) தனி வட்டாட்சியராக நியமனம்.

2. கிருஷ்ணவேணி - கோவை தெற்கு (நகர்ப்புற நிலவரித் திட்டம், அலகு 1) தனி வட்டாட்சியர் பதவியிலிருந்து கோவை தெற்கு வருவாய் வட்டாட்சியராக நியமனம்.

3. வி.குமரி அனந்தன் - கோவை இந்து சமய அறநிலையத் துறை தனி வட்டாட்சியர் பதவியிலிருந்து அன்னூர் வருவாய் வட்டாட்சியராக மாற்றம்.

4. கல்பனா அலமேலு - ஒட்டன்சத்திரம் - திண்டுக்கல் நான்கு வழிச்சாலைத் திட்டம் (பொள்ளாச்சி அலகு) தனி வட்டாட்சியர் பதவியிலிருந்து கோவை இந்து சமய அறநிலையத் துறை தனி வட்டாட்சியராக நியமனம்.

இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் புதிய பணியிடத்தில் உடனடியாக பொறுப்பேற்க வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மாறுதலை தவிர்க்கும் பொருட்டு விடுப்பில் செல்வதோ அல்லது பணியில் சேராமல் காலம் தாழ்த்துவதோ கூடாது என்றும், அவ்வாறு செய்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, பேரூர் உள்ளிட்ட வட்டங்களில் துணை வட்டாட்சியர் நிலையில் பணியாற்றி வந்த 24 வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும் பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த இடமாற்றங்கள் மாவட்டத்தின் நிர்வாக செயல்திறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...