பொள்ளாச்சியில் மாடன் ரைஸ் மில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது - எம்எல்ஏ ஜெயராமன் நேரில் ஆய்வு

பொள்ளாச்சி டீச்சர்ஸ் காலனியில் கனமழையால் மாடன் ரைஸ் மில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அருகிலுள்ள வீடுகள் சிறிய சேதம் அடைந்தன. எம்எல்ஏ ஜெயராமன் நேரில் ஆய்வு செய்தார்.


கோவை: பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சுவர்கள் மற்றும் வீடுகள் இடிந்து சேதமடைந்து வருகின்றன.



இந்நிலையில், பொள்ளாச்சி டீச்சர்ஸ் காலனி பகுதியில் உள்ள மாடன் ரைஸ் மில் சுற்றுச்சுவர் இன்று மாலை இடிந்து விழுந்தது. இதனால் அருகிலுள்ள வீடுகளும் சிறிய அளவில் சேதமடைந்தன. ஆனால், அதிர்ஷ்டவசமாக வீடுகளில் யாரும் இல்லாததால் பெரிய உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.



இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மாடன் ரைஸ் மில் அதிகாரிகளை சந்தித்து, இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை மீண்டும் கட்டுவதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பொள்ளாச்சி பகுதியில் பல இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவதால், பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், பழுதடைந்த கட்டிடங்கள் மற்றும் சுவர்களை உடனடியாக சரி செய்யுமாறு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...