நடுரோட்டில் பழுதான அரசு பேருந்தை தள்ளி இயக்கிய மாணவர்கள், பொதுமக்கள்

பொள்ளாச்சியில் நடுரோட்டில் பழுதடைந்த அரசு பேருந்தை மாணவர்களும் பொதுமக்களும் தள்ளி இயக்கினர். அடிக்கடி பழுதாகும் பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை.


கோவை: பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட 51A எண் கொண்ட அரசு பேருந்து, திருவள்ளுவர் திடல் அருகே திடீரென பழுதடைந்து நின்றது. பேருந்து ஓட்டுநர் பல முறை முயற்சி செய்தும் பேருந்து இயங்கவில்லை.



இதனால் பேருந்தில் பயணித்த பள்ளி மாணவர்கள் மற்றும் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் கட்சியினர் உட்பட பலரும் பேருந்தை பின்புறமாகவும், பின்னர் முன்புறமாகவும் தள்ளினர்.



இறுதியாக பேருந்து இயங்கத் தொடங்கியது.

பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை, நெகமம், பெதப்பம்பட்டி, ஆழியார் உள்ளிட்ட பகுதிகளுக்கு 50க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான பேருந்துகள் அடிக்கடி பழுதடைவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, பழுதடைந்த பேருந்துகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...