அருந்ததியர் இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தமிழ்ப்புலிகள் கட்சி வரவேற்பு

கோவையில் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் அருந்ததியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்றார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.


Coimbatore: கோவை பிரஸ் கிளப்பில் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் செய்தியாளர்களை சந்தித்து, அருந்ததியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்றார்.

நாகை திருவள்ளுவன் கூறுகையில், "பட்டியல் பிரிவிற்குள் மிகவும் பின்தங்கி உள்ள அருந்ததியர் மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2009 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் அருந்ததியர்களுக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள், பட்டியல் பிரிவுக்கு உள்ளாகவே பின்தங்கியுள்ள மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கியிருப்பது செல்லும் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கொடுத்திருக்கிறார்கள்" என்றார்.



"திமுகவிற்கும், உள் இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடிய முற்போக்கு இயக்கங்களுக்கும், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த இயக்கங்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் கிடைத்துள்ள வெற்றியாக நாங்கள் பார்க்கிறோம்" என்று அவர் தெரிவித்தார். மேலும், "இந்த சட்டத்தை கொண்டு வந்த தலைவர் கலைஞருக்கும் இந்த சட்டம் செல்லும் என்ற நிலைக்கு வருவதற்கு உடன் இருந்த Makkaludan Mudhalvar ஸ்டாலினுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றும் கூறினார்.

நாளை காலை தமிழக முதல்வரை சந்தித்து இது குறித்து நன்றி தெரிவிக்க இருப்பதாகவும் நாகை திருவள்ளுவன் தெரிவித்தார். அதேசமயம், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அந்தந்த சாதியின் அடிப்படையில் பிரதிநிதித்துவ இட ஒதுக்கீடு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்த இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...