உடுமலை ஓய்வு பெற்ற துணைப்பதிவாளர் கேரள நிவாரண நிதிக்கு ரூ.50,000 உதவி

உடுமலையில் ஓய்வு பெற்ற கூட்டுறவு துணைப் பதிவாளர் கிருஷ்ணன், வயநாடு மண்சரிவு பாதிப்புக்கு உதவும் வகையில் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50,000 அனுப்பி வைத்துள்ளார். இவர் ஏற்கனவே பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஓய்வு பெற்ற கூட்டுறவு துணைப் பதிவாளர் கிருஷ்ணன், வயநாடு மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50,000 அனுப்பி வைத்துள்ளார்.

வயநாடு மண்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், கேரள முதல்வர் அனைவரும் நிதி உதவி வழங்க வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், உடுமலையில் முதல் நபராக கிருஷ்ணன் தனது சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.50,000 ரூபாயை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.



கிருஷ்ணன் ஏற்கனவே கொரோனா காலகட்டத்தில் தமிழக அரசுக்கு 15 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும், தனது மனைவியின் நினைவாக பத்தாண்டுகளுக்கு மேலாக, ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்.

இவரது தொடர்ந்த சமூக சேவை மற்றும் பிறருக்கு உதவும் மனப்பான்மை பாராட்டுக்குரியது என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...