ஒடிசாவிலிருந்து கோவைக்கு கஞ்சா கடத்தல்: 7 பேர் கைது

கோவை ரயில் நிலையம் அருகே 11 கிலோ கஞ்சாவுடன் 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஒடிசாவிலிருந்து கோவைக்கு கடத்தி வந்த இவர்கள், விற்பனைக்காக கஞ்சாவை கொண்டு வந்தது தெரியவந்தது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மதுவிலக்கு பிரிவு காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் தலைமையிலான காவலர்கள் கோவை ரயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லங்கா கார்னர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த சிலரை பிடித்து காவல் துறையினர் சோதனை நடத்தினர்.

சோதனையின் போது, அவர்களின் பையில் 11 கிலோ கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சாகு (34), டிரேந்தர் பெர்க்ரா (24), ரஞ்சித நாயக் (23), பிரசாந்த் தாகூர் (36), சாகர் முகாரி (57), நரேந்திர திரிபாதி (30), பல்தே ஜிபிலா (20) என்பது தெரியவந்தது. மேலும், கஞ்சாவை விற்பனை செய்ய ஒடிசாவில் இருந்து கோவைக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர், ஏழு பேரையும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஆறு செல்போன்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...