தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினம்: கங்கா செவிலியர் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினத்தை முன்னிட்டு கங்கா செவிலியர் கல்லூரி மாணவர்கள் சாலை பாதுகாப்பு, முதலுதவி பயிற்சி உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளும் நடைபெற்றன.


கோவை: கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள கங்கா செவிலியர் கல்லூரி மற்றும் கோவை கங்கா மருத்துவமனை இணைந்து தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தின. இந்நிகழ்ச்சிகளில் சாலை பாதுகாப்பு மற்றும் காவலர்களுக்கான முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சிகள் உள்ளிட்டவை அடங்கும்.

கங்கா மருத்துவமனை நிறுவன இயக்குனர் டாக்டர் ராஜசேகரன் முன்னிலையில், டாக்டர் தனசேகர் ராஜா (மூத்த ஆலோசகர்- ஆர்தோ பிளாஸ்டி, கங்கா மருத்துவமனை) மற்றும் கங்கா செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்தர் ஜான் ஆகியோர் தலைமையில் கொடியசைத்து நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் தொடக்கமாக, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் பங்கேற்ற சாலை பாதுகாப்பு குறித்த வினா-விடை மற்றும் பேச்சுப் போட்டி ஆன்லைனில் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.



நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, கோவை என்ஜிஜிஓ காலனி ரயில்வே கேட் அருகில் வாகன நெரிசலை சீர்படுத்தும் பணியில் கல்லூரி மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு பொதுமக்களுக்கு உதவினர்.



மேலும், துடியலூர் மற்றும் சாய்பாபா காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு CPR (கார்டியோபல்மனரி ரெசஸிடேஷன்) என்னும் உயிர் காக்கும் முறையை கற்பித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

கங்கா செவிலியர் கல்லூரி 2017 ஆம் ஆண்டு முதல் இதுபோன்ற பல்வேறு சாலை பாதுகாப்பு மற்றும் உயிர் காக்கும் முறைகள் குறித்து பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் காவலர்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...