கோவை TNAU-வில் இளநிலை வேளாண்மை பாடப்பிரிவுகளுக்கான 6வது கட்ட சேர்க்கை அறிவிப்பு

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் (TNAU) இளநிலை வேளாண்மை பாடப்பிரிவுகளுக்கான 6வது கட்ட சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8ஆம் தேதி 300 இடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.



கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் (TNAU) இன்று (ஆகஸ்ட் 5) வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024-2025 கல்வியாண்டிற்கான இளநிலை வேளாண்மை பாடப்பிரிவுகளுக்கான 6வது கட்ட சேர்க்கை தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU) மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (வேளாண்மைப் பிரிவு) (AU) ஆகியவற்றிற்கு ஒரே விண்ணப்பம் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீடு (Academic Stream) மற்றும் 7.5% இடஒதுக்கீட்டிற்கான இணையவழி கலந்தாய்வு ஜூன் 23 முதல் 26 வரை நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பொதுக்கல்விப் பிரிவில் (Academic Stream) ஏற்பட்ட காலியிடங்களுக்கு 6வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 8 (வியாழக்கிழமை) அன்று 300 இடங்களுக்கு நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் தரவரிசை மதிப்பெண், விருப்பப்பாடம் மற்றும் சாதி அடிப்படையில் தற்காலிக சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களான 10ம் மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழுடன் கோவை TNAU வளாகத்திலுள்ள அண்ணா அரங்கத்தில் ஆகஸ்ட் 8 அன்று நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அவர்கள் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணிற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் https://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களது சந்தேகங்களை [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 9488635077, 9486425076 என்ற அலைபேசி எண்களிலோ வாரநாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என TNAU நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...