கோவை சூலூரில் நாளை முதல் 'தாரங் சக்தி' பயிற்சி: 51 நாடுகளுக்கு அழைப்பு

கோவை சூலூரில் ஆகஸ்ட் 6 முதல் 14 வரை 'தாரங் சக்தி' பயிற்சி நடைபெறுகிறது. 51 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பத்து நாடுகளின் விமானப்படை விமானங்கள் பங்கேற்கின்றன.


கோவை: கோவை மாவட்டம் சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் நாளை (ஆகஸ்ட் 6) முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை 'தாரங் சக்தி' பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் பங்கேற்க மொத்தம் 51 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட 10 நாடுகளின் விமானப்படை விமானங்கள் இந்த பயிற்சியில் பங்கேற்க உள்ளன. இந்த பயிற்சியின் 2ம் கட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவும் இந்த பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா பங்கேற்கவில்லை. இந்த பயிற்சி உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் திறமையை வெளிப்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது.

பயிற்சி நடக்கும் போது சூலூர் மற்றும் ஜோத்பூர் ஆகிய இரு இடங்களில் "மேட் இன் இந்தியா" கண்காட்சியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...