கோவை குறிச்சிபுதூரில் டாஸ்மாக் பார் அமைப்பதற்கு எதிர்ப்பு: பொதுமக்கள் பிளக்ஸ் பேனர் வைத்து போராட்டம்

கோவை குறிச்சிபுதூரில் டாஸ்மாக் பார் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பிளக்ஸ் பேனர் வைத்து போராட்டம் நடத்தினர். அமைச்சர் மகேஷ், மாவட்ட கலெக்டர் அலுவலகம், சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் மனு அளித்தனர்.


Coimbatore: கோவை கந்தராபுரம் அருகே உள்ள எல்.ஐ.சி. காலனி பகுதியில் அமைந்துள்ள குறிச்சிபுதூரில் டாஸ்மாக் பார் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த இப்பகுதியில் மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், டாஸ்மாக் பார் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அமைச்சர் மகேஷிடம் மனு அளித்தனர். அதுமட்டுமின்றி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் சுந்தராபுரம் காவல் நிலையத்திலும் மனு அளித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பொள்ளாச்சி சாலையிலிருந்து குறிச்சிபுதூர் பகுதிக்கு செல்லும் சாலையின் துவக்கம் மற்றும் உட்பகுதியில் உள்ள நான்கு இடங்களில் பொதுமக்கள் பிளக்ஸ் பேனர்களை வைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

குடியிருப்பு பகுதி மற்றும் தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடத்தில் மதுபான கடை அமைப்பதால் ஏற்படக்கூடிய சமூக சீர்கேடுகளை தடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...