மேட்டுப்பாளையத்தில் பாகுபலி யானையை பிடிக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையத்தில் 5 ஆண்டுகளாக விவசாயத்தையும் குடியிருப்புகளையும் சேதப்படுத்தும் பாகுபலி யானையை பிடித்து தொலைதூரத்தில் விடக்கோரி தமிழக விவசாய சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கோவை: மேட்டுப்பாளையத்தில் பாகுபலி எனப்படும் யானையை பிடித்து தொலைதூரத்தில் விடக்கோரி தமிழக விவசாய சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த 5 ஆண்டுகளாக மேட்டுப்பாளையம் பகுதியில் ஒரு யானை தினமும் விவசாய நிலங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் சேதப்படுத்தி வருகிறது. இந்த யானை பாகுபலி என அழைக்கப்படுகிறது. இந்த யானையால் ஏற்படும் தொடர் சேதங்களை தடுக்க கோரி, அதனை பிடித்து தொலைதூரத்தில் விட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் உள்ள கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகளும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில், போராட்டக்காரர்கள் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கு வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலினை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...