கோவை காரமடை அருகே மூளையைத் தாக்கும் அமீபா தொற்றுக்கு எதிராக தீவிர கண்காணிப்பு

கேரளாவில் மூளையைத் தாக்கும் அமீபா தொற்று பரவியதை அடுத்து, கோவை காரமடை அருகே உள்ள எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர்.


Coimbatore: கேரளாவில் 'அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்' என்ற மூளையைத் தாக்கும் அமீபா தொற்று பரவி வரும் நிலையில், கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களில் கேரளாவில் நான்கு குழந்தைகள் இந்த அமீபா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். முதன்முறையாக ஒரு இளைஞரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அதேபோல, கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் 14 வயது சிறுவன் 'நிபா' வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தார்.

இதையடுத்து, கேரளா முழுவதும் 'நிபா' வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இந்த நோய்கள் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கோவை காரமடையில் உள்ள கேரள எல்லைப் பகுதியான கோபனாரியில் ஜூலை 22 முதல் தொடர்ந்து நிபா வைரஸ், அமீபா தொற்று போன்ற காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரளாவிலிருந்து வரும் நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.

தற்போது ஆகஸ்ட் 7 அன்று காரமடை அருகிலுள்ள கோப்பனாரி, முள்ளி பகுதிகளில் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து கேரளா செல்வோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. குறிப்பாக கேரளா செல்வோர் நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...