கோவை - பரௌனி இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

கோவை மற்றும் பிகார் மாநிலம் பரௌனி இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 6 வரை இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


கோவை: கோவை மற்றும் பிகார் மாநிலம் பரௌனி இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை தொடங்கப்படவுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 3 வரை கோவையில் இருந்து பரௌனிக்கும், ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 6 வரை பரௌனியில் இருந்து கோவைக்கும் இயக்கப்படும்.

கோவை - பரௌனி வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06059) செவ்வாய்க்கிழமைகளில் கோவையில் இருந்து புறப்பட்டு, வியாழக்கிழமைகளில் பிற்பகல் 2.30 மணிக்கு பரௌனி நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கமாக, பரௌனி - கோவை சிறப்பு வாராந்திர ரயில் (எண்: 06060) வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.45 மணிக்கு பரௌனியில் இருந்து புறப்பட்டு, திங்கள்கிழமைகளில் அதிகாலை 3.45 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயில் பயணத்தின் போது திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, ஏலூரு, ராஜமுந்திரி, பார்வதிபுரம், ராயகடா, முனிகுடா, சம்பல்பூர், ரூர்கேலா, ஹடியா, ராஞ்சி, மூரி, பகோரோ ஸ்டீல் சிட்டி, தன்பாத், சித்தரஞ்சன், மதுப்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில் சேவை மூலம் கோவை மற்றும் பிகார் மாநிலம் இடையேயான பயணிகள் போக்குவரத்து எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...