கோவையில் 'டிமாண்டி காலனி பாகம் 2' படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு

கோவையில் 'டிமாண்டி காலனி பாகம் 2' படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து படம் குறித்த விவரங்களை பகிர்ந்தனர். ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகவுள்ள இப்படம் அனைத்து தொழில்நுட்ப அம்சங்களுக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளதாக தெரிவித்தனர்.


Coimbatore: கோவையில் 'டிமாண்டி காலனி பாகம் 2' படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து படம் குறித்த விவரங்களை பகிர்ந்தனர். இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர்கள் அருள்நிதி, அருண் பாண்டியன், நடிகைகள் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கோவை ஹோப்ஸ் பகுதியில் உள்ள டைடல் பார்க் வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நடிகர்கள் அருள்நிதி, அருண்பாண்டியன், முத்துகுமார், நடிகைகள் பிரியா பவானி சங்கர், அர்ச்சனா, இயக்குநர் அஜய் ஞானமுத்து, தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

படக்குழுவினர் கூறுகையில், "இந்த திரைப்படம் அனைத்து தொழில்நுட்ப விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை தழுவியே இந்த இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. வழக்கமான பேய் படங்களை போல் அல்லாமல் புதுவித அனுபவத்தை கொடுக்கும். திரையரங்குகளில் பார்த்தால் மட்டுமே அந்த அனுபவத்தை உணர முடியும்" என்றனர்.

மேலும், "இசையமைப்பாளர் சியாம்.சி.எஸ் சிறந்த பின்னணி இசையை கொடுத்து திகில் அனுபவத்தை தந்துள்ளார். VFX தொழில்நுட்பம் இப்படத்தில் முக்கிய பங்காற்றி உள்ளது. VFX நன்றாக வருவதற்காகவே அதிக நாட்கள் எடுத்துக் கொண்டோம்" என்றும் தெரிவித்தனர்.

அதே நாளில் மற்ற படங்களும் வெளியாவது குறித்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் அருள்நிதி, "வேண்டுமென்றே அந்த நாளில் இந்த படத்தை வெளியிடவில்லை. அந்நாளில் வெளியாகும் அனைத்து படங்களுமே வெற்றி பெற வேண்டும்" என்றார்.

அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அருள்நிதி, "தற்போது அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை. 2062ல் அது குறித்து யோசிக்கலாம். அப்போது நானும் உயிருடன் இருக்கமாட்டேன், நீங்களும் இருக்க மாட்டீர்கள்" என நகைச்சுவையாக பதிலளித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...