கோவைக்கு அதிமுக கொண்டுவந்த திட்டங்களையே திமுக அரசு திறந்து வைக்கிறது - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கோவையில் உக்கடம் - ஆத்துபாலம் மேம்பாலத்தை பார்வையிட்ட எஸ்.பி.வேலுமணி, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையே திமுக அரசு திறந்து வைப்பதாக குற்றம்சாட்டினார். காவல்துறையுடன் அதிமுகவினர் வாக்குவாதம்.



கோவை: கோவையில் உக்கடம் - ஆத்துபாலம் மேம்பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று திறந்து வைத்தார்.



இன்று கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி மேம்பாலத்தை பார்வையிட்டார்.



இவரது வருகையொட்டி அதிமுகவினர் பாலத்தின் முன்பாக பட்டாசு வெடிக்க முற்பட்டனர். அப்போது காவல்துறையினர் பட்டாசுகளை பறிமுதல் செய்ததால், அதிமுகவினர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோவை மாவட்ட அதிமுக எம்.எல்.ஏக்களுடன் பாலத்தை காரில் சுற்றி பார்த்த எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.



எஸ்.பி.வேலுமணி கூறுகையில், "கோவை மாவட்டத்திற்க்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு திட்டங்களை கொடுத்தார். அந்த வகையில் கோவை மக்களின் 25 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று உக்கடம் - ஆத்துபாலம் மேம்பாலம் அமைக்க முதல்வராக இருந்த ஜெயலிதா அவர்கள் சட்டபேரவையில் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக கூடுதல் நிதி ஒதுக்கி எடப்பாடி பழனிச்சாமி இந்த பாலம் கட்ட உறுதுணையாக இருந்தார். அவருக்கு கோவை மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.

மேலும், "இந்த பாலம் வேலை முழுமையாக இன்னும் முடியவில்லை, அரசு விரைந்து முடிக்க வேண்டும். கோவைக்கு அதிமுக சார்பில் கொண்டு வந்த திட்டங்களை தான், திமுக அரசு திறந்து வைக்கிறது. கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கோவை மாவட்ட மக்களின் மீது அன்பு வைத்துள்ளதால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கேட்காத திட்டங்களை எல்லாம் தந்துள்ளார். இந்த புதிய பாலத்தில் விபத்துகள் ஏற்படாத வண்ணம் தேவையான நடவடிக்களை காவல்துறையினர் எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...