உடுமலை அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா

உடுமலை அருகே அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மாணவர்கள் தங்கள் தாயின் பெயரில் மரக்கன்றுகளை நட்டு பாதுகாக்க உறுதியேற்றனர்.


Coimbatore: உடுமலை அருகே அமராவதி நகரில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சைனிக் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பள்ளி முதல்வர் கேப்டன் கே. மணிகண்டன் மற்றும் பள்ளி வளாகத்தின் முதல் பெண்மணி லட்சுமி மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு மரம் நடும் நிகழ்வை தொடங்கி வைத்தனர்.



முதல்வர் மணிகண்டன் பேசுகையில், "மரங்கள் நமது கிரகத்தின் உயிர் நாடிகள் ஆகும். அவற்றை நடவு செய்வதன் மூலமாக நாம் சுற்றுச்சூழலுக்கு பங்களித்து தாய் பூமியையும் பாதுகாக்கின்றோம். அத்துடன் இனிமேல் வரவிருக்கும் நிலையான எதிர்காலத்தை உறுதி செய்வதும் நமது கடமையாகும்" என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வின் தொடர்ச்சியாக பள்ளி வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. மாணவர்கள், ஆசிரியர்கள், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.



இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக, ஒவ்வொரு கேடட்டும் தாங்கள் நடவு செய்த மரக்கன்றுக்கு தங்களது தாயின் பெயரை சூட்டி, அதனை பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த முயற்சி மூலம் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, தாய்மையின் மகத்துவத்தையும் உணர்த்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.

இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்வை வலியுறுத்தும் "தாய்க்கு செடி" நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அமராவதி கிராம மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இது போன்ற முயற்சிகள் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான சூழலை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்நிகழ்வு ஏற்படுத்தியது.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...