உடுமலை காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பொறுப்பேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளராக கோபாலகிருஷ்ணன் பொறுப்பேற்றார். முன்னதாக பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றிய இவர், முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளராக கோபாலகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

உடுமலை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஜீவானந்தம் ஆய்வாளர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுக்கா காவல் நிலையம் ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், உடுமலை காவல் நிலையத்திற்கு மாற்றலாகி வந்தார்.

புதிய ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் நேற்று இரவு முறைப்படி உடுமலை காவல் நிலையத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வின் போது, காவல் நிலைய ஊழியர்கள் புதிய ஆய்வாளருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். புதிய பொறுப்பில் கோபாலகிருஷ்ணன் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...