முழுஅடைப்பில் தமிழகம்..! வெறிச்சோடிய கோவை..!



தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இன்று (ஏப்ரல் 25) முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதில், பல்வேறு அரசியல் கட்சியினர், வணிகர் சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், நடிகர் சங்கம் உள்ளிட்டு அனைத்துத் தரப்பினரும் பங்கேற்றுள்ளனர்.



விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை மாவட்டத்தில் காய்கறி மார்கெட், பழக்கடை, நகைக்கடை மற்றும் ஜவுளிக்கடை உள்ளிட்டு பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கோவை டவுன்ஹால், உக்கடம், காந்திபுரம் உட்பட நகர் முழுவதும் கடைகள் மூடப்பட்டுள்ளது.



முழு அடைப்புப் போராட்டம் காரணமாக தனியார் பேருந்துகள், லாரிகள் இயங்காத காரணத்தால் கோவை மாநகர சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

மேலும், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திரையரங்குகள் மூடப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனிடையே, கோவையில் அரசுப் பேருந்துகள் மட்டும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகளும், ஆட்டோக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசுப் பேருந்துகளில் பணிக்குச் செல்லும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...