அக்னிவீர் திட்டம்: ராகுல் காந்தியின் அவதூறுகளை நிறுத்த வேண்டும் - பாஜக முன்னாள் ராணுவ பிரிவு தலைவர் ராமன்

கோவை சித்தாபுதூரில் பாஜக முன்னாள் ராணுவ பிரிவு தலைவர் ராமன் அக்னிவீர் திட்டம் குறித்து விளக்கமளித்தார். ராகுல் காந்தியின் அவதூறுகளை கண்டித்த அவர், திட்டத்தின் நன்மைகளை எடுத்துரைத்தார்.



Coimbatore: கோவை சித்தாபுதூர் பாஜக அலுவலகத்தில் தமிழக பாஜக கட்சியின் முன்னாள் ராணுவ பிரிவின் தலைவர் ராமன் மத்திய அரசின் அக்னிவீர் திட்டம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அக்னிவீர் திட்டம் ஜனாதிபதி ஒப்புதலோடு உரிய சட்ட திருத்த மசோதாக்களுடன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக ராமன் தெரிவித்தார். இந்த திட்டம் நாட்டின் பாதுகாப்பை அதிகப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.



17 1/2 முதல் 21 வயது வரையிலான, 10-ம் வகுப்பு படித்த இளைஞர்கள் இத்திட்டத்தில் சேரலாம் என்றும், 4 ஆண்டுகள் பணி முடிந்த பிறகு ஊதியத்துடன் சேர்த்து 20 லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியும் என்றும் ராமன் விளக்கினார். அக்னிவீர் திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு இந்திய ராணுவம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் 10%-க்கு மேல் பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பணிபுரியும் போது வீரர்களுக்கு 5 பிரிவுகளில் மத்திய ராணுவ படிப்புடன் இணைந்து பாடம் படிக்க முடியும் என்றும், 4 ஆண்டு காலம் பணி முடித்த பிறகு நேரடியாக பொறியியல் படிப்பில் இரண்டாம் ஆண்டு சேர முடியும் என்றும் ராமன் தெரிவித்தார். பணியின்போது இறந்தால் ஒரு கோடி ரூபாய் வரை இன்சூரன்ஸ் மூலம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், 10% காவல்துறையில் பணியில் சேர முடியும் என்றும், ஆனால் தமிழக அரசு அதனை நிராகரித்து வருவதால் இளைஞர்கள் சிரமப்படுவதாகவும் ராமன் குறிப்பிட்டார்.

இறுதியாக, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் இத்திட்டம் குறித்து பொய்யான அவதூறுகளை பரப்பி வருவதாகவும், பொதுமக்கள் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் ராமன் வலியுறுத்தினார்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...