உடுமலை வனச்சரக அலுவலகத்தில் இரு வனச்சரகர்கள்: விவசாயிகள் குழப்பம்

உடுமலை வனச்சரக அலுவலகத்தில் இரண்டு வனச்சரகர்கள் பணியாற்றுவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர். வனவிலங்குகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு யாரிடம் புகார் அளிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் உடுமலை வனச்சரகம் அமைந்துள்ளது. இங்கு தற்போது இரண்டு வனச்சரக அலுவலர்கள் பணியாற்றி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.



உடுமலை வனச்சரக அலுவலராக பணியாற்றி வந்த சிவக்குமார் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.



அவருக்குப் பதிலாக மணிகண்டன் என்பவர் நியமிக்கப்பட்டார். ஆனால், சிவக்குமார் தனது பணியிட மாற்றத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் சிவக்குமாரின் பணியை தொடர அனுமதித்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, தற்போது உடுமலை வனச்சரக அலுவலகத்தில் சிவக்குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் வனச்சரக அலுவலர்களாக பணியாற்றி வருகின்றனர். இருவரும் தனித்தனியாக மேசை நாற்காலி அமைத்து பணிபுரிவதால், பொதுமக்களும் விவசாயிகளும் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.



வனவிலங்குகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு யாரிடம் புகார் தெரிவிப்பது, எவ்வாறு நிவாரணம் பெறுவது என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், வனம் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், ஒரே பணிக்கு இரண்டு நபர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களின் வரிப்பணம் வீணாகும் நிலை உருவாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில், வனத்துறை உயர் அதிகாரிகள் உடுமலை வனச்சரக அலுவலராக சிவக்குமாரா அல்லது மணிகண்டனா என்பதை முறையாக பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...