மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு இல்லை: கோவையில் மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

கோவையில் மதிமுக சார்பில் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு இல்லை என்று கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூன் ராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர்.


கோவை: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கவில்லை என்று கூறி, ஒன்றிய அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மதிமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.



அதன் அடிப்படையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட மதிமுகவினர் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மதிமுக மாநில அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூன் ராஜ் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகளும் 50க்கும் மேற்பட்ட மதிமுக தொண்டர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோவை மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...