கோவை மாநகர அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

கோவை மாநகர அனைத்து வியாபாரிகள் சங்கம் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டவுன்ஹாலில் கொடியேற்றி, பேரணி நடத்தி, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி, இரத்த தான முகாம் நடத்தியது.



கோவை: கோவை மாநகர அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



கோவை டவுன்ஹாலில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.



இதனைத் தொடர்ந்து, வியாபாரிகள் அனைவரும் டவுன்ஹால் பகுதியில் பேரணியாக சுற்றி வந்தனர்.



பின்னர், அரசு பள்ளியில் படிக்கும் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டன.



மேலும், வியாபாரிகள் சங்கம் சார்பாக இரத்த தான முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...