கோவை கல்லூரியில் 3டி பிரிண்டிங் ஏ.ஐ. ரோபோட் மற்றும் ட்ரோனுடன் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் 78வது சுதந்திர தின விழா வித்தியாசமாக கொண்டாடப்பட்டது. மாணவர்கள் வடிவமைத்த 3டி பிரிண்டிங் ஏ.ஐ. ரோபோட் மற்றும் ட்ரோன் கவனம் ஈர்த்தன.


கோவை: கோவை கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 78வது சுதந்திர தின விழா வித்தியாசமான முறையில் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் கூட்டு முயற்சியில் வடிவமைக்கப்பட்ட 3டி பிரிண்டிங் ஏ.ஐ. ரோபோட் மற்றும் ட்ரோன் மூலம் விழா சிறப்பாக நடைபெற்றது.

3டி ஏ.ஐ. ரோபோட் கைகளில் தேசியக் கொடி ஏந்தி வாழ்த்து தெரிவித்தது. மாணவர்கள் வடிவமைத்த ட்ரோனில் நாட்டின் தேசியக் கொடி வானில் பறந்தது. தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மற்றும் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் மாதாந்திர உதவித்தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

விழாவின் சிறப்பு விருந்தினராக இந்திய கப்பல் படை அதிகாரி கமோடர் பாலசுந்தரம் கலந்து கொண்டார். அவர் தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றினார். "நாம் 2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த மற்றும் தன்னிறைவு நாடாக மாறும் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். இளைய தலைமுறையினர் தங்களுக்குக் கிடைக்கும் ஸ்டார்ட்அப், ஆராய்ச்சி, விளையாட்டு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான வாய்ப்பு, ஆதரவு மற்றும் வசதிகளை நேர்த்தியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து முப்படையைச் சேர்ந்த தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு, மாணவர்களின் சிலம்பாட்டம், மற்றும் ட்ரோன் சாகசம் போன்றவை நடைபெற்றன. இந்த வித்தியாசமான சுதந்திர தின கொண்டாட்டம் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...