கோவையில் வளர்ப்பு நாய் கடித்து குதறியதில் பெண் படுகாயம்

கோவை காந்திபுரம் பகுதியில் வீட்டை பெருக்கிக் கொண்டிருந்த பெண்ணை வளர்ப்பு நாய் கடித்து குதறியதில் படுகாயமடைந்தார். பாதிக்கப்பட்ட பெண் குன்னூரில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Coimbatore: கோவை காந்திபுரம் பகுதியில் வீட்டை பெருக்கிக் கொண்டிருந்த பெண்ணை வளர்ப்பு நாய் கடித்து குதறியதில் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காந்திபுரம் நூறு அடி சாலை 9வது வீதி, ராஜேந்திர பிரசாத் சாலையில் வசிப்பவர் சிந்து. இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சனிக்கிழமை மாலை, சிந்து தனது வீட்டு வாசலை பெருக்கிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் ஐசக் பாபு என்பவரின் வளர்ப்பு நாய் திடீரென சிந்துவின் மீது பாய்ந்து கடித்துக் குதறியது.

இந்த தாக்குதலில் சிந்துவின் வலது கை, இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர் கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது மேலும் சிகிச்சைக்காக குன்னூரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு தேவையான ஊசிகள் போடப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த வளர்ப்பு நாய் இதற்கு முன்னர் 10-க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளதாகவும், நாய்க்கு தடுப்பூசி கூட போடப்படவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும், நாயின் உரிமையாளரான ஐசக் பாபுவிடம் இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும், அவர் அலட்சியமாக நடந்து கொண்டதாகவும் குற்றம்சாட்டினர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வளர்ப்பு நாய்களை பொறுப்புடன் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும், தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தையும் இச்சம்பவம் வலியுறுத்தியுள்ளது.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...