பெரியநாயக்கன்பாளையம் அருகே கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த பீகார் இளைஞர் கைது

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே குமாரபுரம் பேருந்து நிறுத்தத்தில் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Coimbatore: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமாரபுரம் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில், ஆகஸ்ட் 18 ஆம் தேதி பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய போலீசார் குமாரபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சேட்டு பாஸ்வான் (23) என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேட்டு பாஸ்வானிடமிருந்து 1 கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட சேட்டு பாஸ்வானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் விற்பனையை தடுக்க காவல்துறை தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...