பாலக்காடு கோழிப்பாறை அஹல்யா நீரிழிவு மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்

பாலக்காடு கோழிப்பாறையில் உள்ள அஹல்யா நீரிழிவு மருத்துவமனையில் ஆகஸ்ட் 20 முதல் 31 வரை இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. பல்வேறு நோய்களுக்கு இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கப்படுகிறது.



Coimbatore: பாலக்காடு அருகே உள்ள கோழிப்பாறையில் அமைந்துள்ள அஹல்யா நீரிழிவு மருத்துவமனையில் ஆகஸ்ட் 20 முதல் 31 வரை இலவச மருத்துவ முகாம் நடைபெறுவதாக மருத்துவமனையின் முதன்மை மருத்துவ இயக்குனர் சுரேஷ் பாபு தெரிவித்தார்.

இந்த முகாமில் பொது அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, நீரிழிவு பாத நோய் சிகிச்சை, எலும்பு நோய் சிகிச்சை ஆகியவற்றுக்கு இலவச ஆலோசனையும், மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. மேலும், பவுத்திரம், மூலம், குடலிறக்கம், விரை வீக்கம், முதுகு வலி, மூட்டு வலி, முதுகு தண்டுவட பிரச்சினைகள் போன்ற நோய்களுக்கும் ஆலோசனையும், சிகிச்சையும் வழங்கப்படுகிறது.



அஹல்யா நீரிழிவு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ இயக்குனர் சுரேஷ் பாபு மற்றும் பொது அறுவை சிகிச்சை பிரிவு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவு, நீரிழிவு பாத நோய் சிகிச்சை பிரிவு, எலும்பு நோய் சிகிச்சை பிரிவு ஆகியவற்றின் முதன்மை மருத்துவர்கள் பொள்ளாச்சியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து இந்த தகவல்களை வெளியிட்டனர்.

அறுவை சிகிச்சைகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படுவதாகவும் சுரேஷ் பாபு கூறினார். பொதுமக்கள் இந்த இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...