கோவை வடக்கு மாவட்டம் துடியலூர் பகுதி திமுக உறுப்பினர்கள் கூட்டம்: மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி பங்கேற்பு

கோவை துடியலூர் அருகே வடமதுரையில் திமுக கோவை வடக்கு மாவட்டம் துடியலூர் பகுதி கழகம் சார்பாக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார்.



கோவை: கோவை துடியலூர் அருகே வடமதுரையில் உள்ள எஸ்.எஸ்.கமலேஷ் திருமண மண்டபத்தில் திமுக கோவை வடக்கு மாவட்டம் துடியலூர் பகுதி கழகம் சார்பாக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டத்திற்கு பகுதி செயலாளர் அருள்குமார் தலைமை வகித்தார். 2வது வட்ட கழக செயலாளர் சண்முகம் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியன், முன்னாள் எம்.பி. நாகராஜன், சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் மணிசுந்தர், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகர், விளையாட்டு மேம்பாட்டு துறை மாவட்ட அமைப்பாளர் தியாகு, ஆதிதிராவிர அணி மாவட்ட அமைப்பாளர் தென்னை சிவா, வட்ட கழக செயலாளர்கள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர்.



கூட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.



சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி பேசுகையில், "அனைத்து உறுப்பினர்களின் கருத்துகளுக்கும் உரிய பதில்கள் தலைமையிடமிருந்து கண்டிப்பாக கிடைக்கும். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 என்று வெற்றி பெற்றது போல, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளையும் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.



இக்கூட்டத்தில் பகுதி அவைத்தலைவர், துணை செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், பல்வேறு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள், பாக முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, மாவட்ட பிரதிநிதி தன்ராஜ் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...