கோவை மாநகராட்சி பெண் ஊழியருக்கு லஞ்சம் வாங்கியதற்காக ஓராண்டு சிறை தண்டனை

கோவை மாநகராட்சியின் முன்னாள் வரி வசூலிப்பாளர் வசந்தகுமாரி, சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு ரூ.7,000 லஞ்சம் கேட்டதற்காக ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியது.


கோவை: கோவை மாநகராட்சியின் முன்னாள் வரி வசூலிப்பாளர் வசந்தகுமாரி, சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் கேட்டதற்காக ஓராண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார். கோவை ஊழல் தடுப்பு சட்டங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

2014 ஆம் ஆண்டில், கோவை சலீவன் வீதி காந்திபூங்கா பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரவேல் என்பவர் நிலம் வாங்கினார். அந்த நிலத்தின் சொத்துவரி பெயர் மாற்றம் செய்ய, கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 20-வது வார்டில் அப்போது வரி வசூலிப்பாளராக பணிபுரிந்து வந்த வசந்தகுமாரியை அணுகினார்.

சொத்துவரியில் பெயரை மாற்றுவதற்கு வசந்தகுமாரி ரூ.7,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து முத்துகுமரவேல், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வசந்தகுமாரியை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை ஊழல் தடுப்பு சட்டங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.மோகனாரம்யா, வரி வசூலிப்பாளர் வசந்தகுமாரிக்கு ஓராண்டு சிறையும், ரூ.10,000 அபராதமும் விதித்து ஆகஸ்ட் 30 அன்று தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பு, அரசு ஊழியர்கள் மத்தியில் லஞ்சம் வாங்கும் பழக்கத்தை தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...