விநாயகர் சதுர்த்தி: புலியகுளம் முந்தி விநாயகர் 40 கிலோ சந்தன காப்பு, 2 டன் மலர்களுடன் ராஜ அலங்காரத்தில் காட்சி

கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 40 கிலோ சந்தன காப்பு, 2 டன் மலர்களுடன் ராஜ அலங்காரத்தில் விநாயகர் காட்சியளிக்கிறார். பக்தர்கள் அதிகாலை முதல் வழிபாடு செய்கின்றனர்.



Coimbatore: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை புலியகுளத்தில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 40 கிலோ சந்தன காப்பு மற்றும் 2 டன் மலர்களுடன், ராஜ அலங்காரத்தில் காட்சியளிக்கும் முந்தி விநாயகரை அதிகாலை முதலே பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்து வருகின்றனர்.

ஆசியாவிலேயே மிக உயரமான விநாயகர் சிலைகளுள் ஒன்றான, பிரசித்தி பெற்ற கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில், விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது. அதிகாலை 16 வகையான வாசனை திரவியங்கள் மற்றும் அபிஷேக பொருட்களால், விநாயகர் சதுர்த்தி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.



அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து விநாயகரை வழிபட்டு வருகிறார்கள். அதேபோல் இன்றைய தினம் அன்னதானமும் வழங்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் வரிசையாக நின்று விநாயகரை வழிபடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.



கோவை மட்டுமின்றி அன்டை மாவட்ட பக்தர்களும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்காக கோவை புலியகுளம் விநாயகர் கோயிலுக்கு வந்து அதிகாலை முதலே பக்தியுடன் முந்தி விநாயகரை வழிபாடு செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...