விநாயகர் சதுர்த்தி: புலியகுளம் முந்தி விநாயகர் 40 கிலோ சந்தன காப்பு, 2 டன் மலர்களுடன் ராஜ அலங்காரத்தில் காட்சி

கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 40 கிலோ சந்தன காப்பு, 2 டன் மலர்களுடன் ராஜ அலங்காரத்தில் விநாயகர் காட்சியளிக்கிறார். பக்தர்கள் அதிகாலை முதல் வழிபாடு செய்கின்றனர்.



Coimbatore: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை புலியகுளத்தில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 40 கிலோ சந்தன காப்பு மற்றும் 2 டன் மலர்களுடன், ராஜ அலங்காரத்தில் காட்சியளிக்கும் முந்தி விநாயகரை அதிகாலை முதலே பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்து வருகின்றனர்.

ஆசியாவிலேயே மிக உயரமான விநாயகர் சிலைகளுள் ஒன்றான, பிரசித்தி பெற்ற கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில், விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது. அதிகாலை 16 வகையான வாசனை திரவியங்கள் மற்றும் அபிஷேக பொருட்களால், விநாயகர் சதுர்த்தி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.



அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து விநாயகரை வழிபட்டு வருகிறார்கள். அதேபோல் இன்றைய தினம் அன்னதானமும் வழங்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் வரிசையாக நின்று விநாயகரை வழிபடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.



கோவை மட்டுமின்றி அன்டை மாவட்ட பக்தர்களும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்காக கோவை புலியகுளம் விநாயகர் கோயிலுக்கு வந்து அதிகாலை முதலே பக்தியுடன் முந்தி விநாயகரை வழிபாடு செய்து வருகின்றனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...