கோவையில் காலாவதியான குளிர்பானம் விற்பனை: கடை உரிமையாளரை எதிர்த்த தம்பதியின் வீடியோ வைரல்

கோவை போத்தனூரில் உள்ள உணவகத்தில் காலாவதியான குளிர்பானம் விற்பனை செய்யப்பட்டதை கண்டித்த தம்பதியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளது.


கோவை: கோவை போத்தனூரைச் சேர்ந்த சன்சர் - நிஷா தம்பதியினர் அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பீட்சாவிற்காக காத்திருந்தபோது, அருகிலுள்ள டீக்கடையில் கேக் மற்றும் மா (Maa) குளிர்பானம் வாங்கினர். குளிர்பானத்தை திறந்து குடிக்கும்போது அது கெட்டுப்போயிருப்பதை உணர்ந்தனர்.

கடையில் பணிபுரிந்த நபரிடம் இது குறித்து கேட்டபோது, அவர் குளிர்பானம் கெட்டுப்போகவில்லை என்றும், அதன் காலாவதி தேதி இன்னும் ஆறு மாதங்கள் இருப்பதாகவும், அது சமீபத்தில் வாங்கப்பட்டது என்றும் கூறினார். ஆனால், அருகில் இருந்தவர்களிடம் குடித்துப் பார்க்கச் சொன்னபோது, அதுவும் கெட்டுப்போயிருப்பதை உறுதிப்படுத்தினர்.

இந்த சம்பவத்தை தங்கள் செல்போனில் பதிவு செய்த தம்பதியினர், அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது பரவலாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Newsletter

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...