கோவை வ.உ.சி. மைதானத்தில் பிரம்மாண்ட கடல் கன்னி கண்காட்சி துவக்கம்

கோவை வ.உ.சி. மைதானத்தில் எம்.கே.சி. எண்டர்டெயின்மெண்ட் சார்பாக பிரம்மாண்டமான மரைன் எக்ஸ்போ துவங்கியது. ஒன்றரை இலட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்ட இந்த கண்காட்சி, மீன் சுரங்கம், கடல் கன்னி மற்றும் வெளிநாட்டு விளையாட்டு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.



கோவை: கோவை வ.உ.சி. மைதானத்தில் பிரம்மாண்டமான மரைன் எக்ஸ்போ எனும் கடல் கன்னி கண்காட்சி துவங்கியது.



எம்.கே.சி. எண்டர்டெயின்மெண்ட் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சி குறித்து, நிறுவனத்தின் உரிமையாளர் சிட்டி பாபு மற்றும் சந்திரசேகர் செய்தியாளர்களிடம் விவரங்களை பகிர்ந்து கொண்டனர்.



கோவை மக்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த கண்காட்சி சுமார் ஒன்றரை இலட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அரசு வழிகாட்டுதல்களின்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். மேலும், ஏராளமான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



கோவையில் இது போன்ற பிரம்மாண்ட கண்காட்சி முதல் முறையாக நடைபெறுவதாக அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.



வெளிநாடுகளில் காணப்படுவது போன்ற இலட்சக்கணக்கான மீன்களைக் கொண்ட சுரங்கங்கள், கடல் கன்னி உள்ளிட்டவை பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.



இந்த கண்காட்சியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

வெளிநாட்டு பிரம்மாண்ட ராட்டினம், உணவு அரங்குகள், ஸ்னோ வேர்ல்ட், பேய் வீடு, 3D கண்காட்சி அரங்குகள் ஆகியவை இதில் அடங்கும். மேலும், உணவுப் பொருட்கள், ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக்கான அரங்குகள் என 50க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த பிரம்மாண்ட கடல் கன்னி கண்காட்சி கோவை மக்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீன் சுரங்கம், கடல் கன்னி மற்றும் வெளிநாட்டு விளையாட்டு அம்சங்கள் என பல்வேறு வகையான அரங்குகளை கோவை வாழ் மக்கள் காணும் அரிய வாய்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...