செத்தால் தான் குண்டு குழியை மூடுவீர்களா? - மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு பாதாள சாக்கடை திட்டம், சாலைகள் சீரமைப்பு, குப்பை வரி ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.



Coimbatore: கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக அமல்படுத்துதல், மாவட்டம் முழுவதும் சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களை சீரமைத்தல், குப்பை வரியை ரத்து செய்தல், வீடுகளில் தினசரி குப்பை சேகரிப்பை உறுதி செய்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின்போது மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மார்க்சிஸ்ட் கட்சியினர் பேசுகையில், "கடந்த ஆட்சியில் மக்கள் வரிப்பணத்தை எஸ்பி வேலுமணி சூறையாடினார். ஓம் காளி! ஜெய் காளி! மாநகராட்சி கஜானா காலி! என்றாகிவிட்டது. இந்த முறை மாநகராட்சி கஜானாவை யார் காலி செய்து வருகிறார் என்று தெரியவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி ஒருபோதும் அதை அனுமதிக்காது" என்று குற்றம்சாட்டினர்.



"சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் தோண்டப்பட்ட குழியில் மூவர் விழுந்ததும் உடனடியாக அந்த குழி மூடப்பட்டது. செத்தால் தான் குண்டு குழியை மூடுவீர்களா?" என்று கேள்வி எழுப்பினர்.

நூற்றுக்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.



"விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமாகும்" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த போராட்டக்காரர்கள் அதிகாரிகளிடம் எச்சரித்துள்ளனர்.

Newsletter

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...