பொள்ளாச்சி நகராட்சியில் பயன்பாடற்ற தள்ளுவண்டிகள் பறிமுதல் செய்யப்படும் - நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

பொள்ளாச்சி நகராட்சியில் சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் தள்ளுவண்டிகள் பறிமுதல் செய்யப்படும் என நகராட்சி ஆணையர் கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Coimbatore: பொள்ளாச்சி நகராட்சியில் பயன்பாடு இல்லாத தள்ளுவண்டிகள் பறிமுதல் செய்யப்படும் என நகராட்சி ஆணையர் கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொள்ளாச்சி நகராட்சியில் 1,243 பதிவு பெற்ற தள்ளுவண்டி கடைகள் உள்ளன. இவற்றுடன் பதிவு பெறாத தள்ளுவண்டிகளிலும் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக நகராட்சி ஆணையர் கணேசன் செப்டம்பர் 11 அன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் வியாபாரம் செய்ய வேண்டும் என்றும், தினமும் வண்டியை எடுத்துச் சென்று மீண்டும் வியாபாரம் செய்யும் வகையிலேயே அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், வியாபாரம் செய்யும் இடத்தில் பந்தல் போடுதல், தடுப்புகள் அமைத்தல், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கைகள் போடுதல் போன்ற நிரந்தரமாக இடத்தை பிடித்து வியாபாரம் செய்யும் வகையில் செயல்படக்கூடாது எனவும் எச்சரித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து செயல்படுவது கண்டறியப்பட்டால், அது ஆக்கிரமிப்பாக கருதப்பட்டு அப்புறப்படுத்தப்படும் என்றும் நகராட்சி ஆணையர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...