கோவை மாமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி குற்றச்சாட்டு: திமுக-அதிமுக இடையே வாக்குவாதம்

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் 'ஸ்டிக்கர் ஆட்சி' குற்றச்சாட்டு எழுப்பினார். இதனால் திமுக-அதிமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


Coimbatore: கோவை மாநகராட்சி விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் இன்று (செப்டம்பர் 13) மாமன்ற சாதாரணக் கூட்டம் நடைபெற்றது. மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையர் க.சிவகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும், மண்டல குழுத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.



கூட்டத்தின் போது, அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் பிரபாகரன் பேசுகையில், மாநகராட்சியில் "ஸ்டிக்கர் ஆட்சி" நடப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டை திமுக கவுன்சிலர்கள் கடுமையாக எதிர்த்தனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் மாமன்றக் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் அமைதி திரும்பியதும், மீண்டும் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்த சம்பவம் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...