சிங்காநல்லூரில் ரூ.8 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம்: எம்எல்ஏ கே.ஆர் ஜெயராம் திறந்து வைத்தார்

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் ஆணையங்காடு சாலையில் ரூ.8 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை எம்எல்ஏ கே.ஆர் ஜெயராம் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பல்வேறு கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் தொகுதி 61-வது வார்டுக்குட்பட்ட ஆணையங்காடு சாலையில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் இன்று (செப்டம்பர் 13) திறந்து வைத்தார்.



சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் ரூ.8 லட்சம் செலவில் இந்த அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய மையம் பகுதியில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் ஆரம்பக் கல்வி தேவைகளை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.



திறப்பு விழா நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் சிவகுமார், வட்டக் கழக செயலாளர்கள் பாலமுருகன், சசிகுமார், பக்ருதீன், மாவட்ட துணை செயலாளர் பீளமேடு துரைசாமி, கைத்தறி முத்துசாமி, சிங்கைபாலன், எஸ் ஆர் ரவி, சிங்கை வசந்தி, ஜெயகோபால், குமரேசன், நல்லதம்பி மற்றும் பல்வேறு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், அப்பகுதி பொதுமக்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...