ஓணம் பண்டிகைக்காக கோவை விமான நிலையத்தில் 4 நாட்களில் 119 டன் பூ, காய்கறி அனுப்பி வைப்பு

கோவை விமான நிலையத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 4 நாட்களில் 119 டன் பூக்கள் மற்றும் காய்கறிகள் உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் 2 நாட்களில் மட்டும் 5 டன் கொத்தமல்லி அனுப்பப்பட்டுள்ளது.


கோவை: ஓணம் பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு 4 நாட்களில் 119 டன் எடையிலான பூ, காய்கறிகள் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கோவை விமான நிலையத்தில் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் தினமும் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமான சேவை வழங்கப்படுகிறது. தினமும் 25 முதல் 28 விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆண்டுக்கு கோவை உள்ளிட்ட சுற்றுப்புற ஏழு மாவட்டங்களை சேர்ந்த 30 லட்சம் பேர் விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

விமான நிலைய வளாகத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த சரக்கக அலுவலகத்தின் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பல்வேறு பொருட்கள் கையாளப்படுகின்றன. வழக்கத்தை விட பண்டிகை நாட்களில் அதிகளவு சரக்குகள் கையாளப்படுவது வழக்கம். இவ்வாண்டு ஓணம் பண்டிகை செப்டம்பர் 15-ம் தேதி ஞாயிற்றுகிழமை கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து வழக்கத்தை விட அதிக எடையிலான காய்கறிகள், பூக்கள் ஆகியவை கையாளப்படகின்றன.

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:

"வழக்கமாக உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் கோவையில் இருந்து பல நகரங்களுக்கு அனுப்பப்படும்(அவுட்பவுண்ட் பிரிவில்) 25 டன் எடையிலான சரக்குகள் தினமும் கையாளப்படும். ஓணம் பண்டிகை முன்னிட்டு கடந்த சில நாட்களாக உள்நாட்டு பிரிவில் சரக்கு கையாளுகை அதிகரித்துள்ளது.

செவ்வாய்கிழமை 34 டன், புதன்கிழமை 33 டன், வியாழக்கிழமை 27 டன், வெள்ளிக்கிழமை 25 டன் என நான்கு நாட்களில் மட்டும் 119 டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இவற்றில் கேரட், பீட்ரூட், கோவக்காய், முருங்கை ஆகிய காய்கறிகளும், கொத்தமல்லி மற்றும் பூக்கள் அதிகளவு புக்கிங் செய்யப்படுகின்றன.

குறிப்பாக புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை இரு நாட்களில் கொத்தமல்லி மட்டும் 5 டன் வரை புக்கிங் செய்யப்பட்டு பல்வேறு நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது தவிர காய்கறிகளுக்கு இணையாக பூக்களும் அதிகளவு கையாளப்படுகின்றன. வெளிநாட்டு பிரிவில் ஓணம் பண்டிகைக்காக குறிப்பிட்டு சொல்லும்படி அதிக காய்கறி, பூக்கள் கையாளப்படவில்லை."

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...